பெங்களூர்: காந்தாரா படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு 20 நாட்கள் விரதம் இருந்தாராம் ரிஷப் ஷெட்டி. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் காந்தாரா. இந்த படம் கன்னடம் தவிர, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் டப் செய்து வெளியானது. இதுவரை அனைத்து மொழிகளையும் சேர்த்து ரூ.230 கோடி வசூலை ஈட்டியுள்ளது. குறிப்பாக பாலிவுட்டில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இந்த படம், மவுத்டாக் மூலம் பிரபலமாகிவிட்டது. இந்த படம் 2 வாரத்தில் வட இந்தியாவில் மட்டும் ரூ.42 கோடி வசூலித்துவிட்டது. தீபாவளிக்கு அஜய் தேவ்கன் நடித்த தேங்க் காட், அக்ஷய் குமார் நடித்த ராம் சேது படங்கள் வெளியாகின. இந்த படங்களை ஓரம்கட்டிவிட்டு காந்தாரா பாலிவுட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.