கொத்துார்: குஜராத்தில் பாஜவுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதால் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் கொத்துார் என்ற இடத்தில் அவர் நேற்று கூறுகையில்,‘‘குஜராத்தில் ஆளும் பாஜ அரசுக்கு எதிராக மக்களிடம் கடும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் வலுவான முறையில் தயாராகி உள்ளது.