இதனால் குழந்தையை ஆக்ஸிஜனில் வைத்து என்.ஐ.சி.யூ க்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் பணியாளர்கள் பற்றாக்குறையால் குழந்தையைப் பிடித்துக் கொண்டு செவிலியர் முன்னே சென்று கொண்டிருக்க குழந்தையின் தந்தை அல்லு விஷ்ணுமூர்த்தி, ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வைரலானது. சரியான ஊழியர்கள் இல்லாதது ஆக்சிஜன் சிலிண்டருக்கான ட்ராலி இல்லாமல் தோளில் சுமந்து செல்லும் நிலை என நெட்டிசன்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது விமர்சனம் செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் சிவானந்தம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
The post விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையால் பிறந்த குழந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்து சென்ற தந்தை appeared first on Dinakaran.