கோவில்பட்டி: கோவில்பட்டியில் புது வீடு கட்டியதில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டார். கோவில்பட்டி கடலையூர் சாலை, பெருமாள் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (45). கொத்தனார். இவரது மனைவி பரணிசெல்வி (40). இவர் லாயல் மில் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு மனோஜ் என்ற மகனும், உமா என்ற மகளும் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் பெருமாள் நகரில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளனர். இதற்காக வாங்கிய கடன் தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மனோஜ் பெட்டிக்கு கடைக்கும், உமா வெளியேயும் சென்றுள்ளனர். மனோஜ் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. வெகுநேரமாக தட்டியும் திறக்கப்படவில்லை.