கடையம்: கடையம் அருகே தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கொடிக்கம்பம் நட முயன்ற கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி பலியானார். தென்காசி மாவட்டம், கடையம் அருகே கோவிந்தபேரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களது மூத்த மகன் முத்துக்குமார், அம்பை கலைக்கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கோவிந்தபேரி கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழாவுக்காக நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் மற்றும் இளைஞர்கள் அங்குள்ள முப்புடாதியம்மன் கோயில் முன்பு கொடிக் கம்பம் நட முயன்றுள்ளனர்.