ஐதராபாத்: அல்லு அர்ஜுன், ராம்சரண் இணையும் படம் பல மொழிகளில் உருவாக உள்ளது. புஷ்பா படம் மூலம் அல்லு அர்ஜுன் பான் இந்தியா ஸ்டாராகிவிட்டார். அதேபோல் ஆர்ஆர்ஆர் படம் மூலம் ராம்சரணும் பான் இந்தியா ஸ்டாராகியுள்ளார். அல்லு அர்ஜுனும் ராம்சரணும் உறவினர்கள். இவர்கள் எவடு என்ற படத்தில் நடித்தார்கள். ஆனால் இருவரும் சேர்ந்து வரும் காட்சி படத்தில் இல்லை. கதைப்படி அல்லு அர்ஜுன் இறந்த பிறகு ராம்சரண் படத்தில் வருவார். இதில் அல்லு அர்ஜுன் கவுரவ தோற்றத்தில்தான் நடித்திருந்தார். இதனால் இப்போது இருவரையும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க பலர் முயற்சித்து வந்தனர்.