மதுரை: திருச்சியைச் சேர்ந்த அபிராமி, தனக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி கலெக்டரிடம் அளித்த மனுவை ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரின் பெற்றோர் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள். அங்கு நடந்த உள்நாட்டு போரால் இந்தியாவிற்கு வந்துள்ளனர். தற்போது 29 வயதாகும் மனுதாரர் திருச்சியில் கடந்த 1993ல் பிறந்துள்ளார். இந்திய அரசின் ஆதார் அட்டை பெற்றுள்ளார். 29 ஆண்டுகளாக இங்கேயே வசிப்பதால் இந்திய குடியுரிமை கேட்கிறார். மனுதாரர் இலங்கை குடியுரிமை பெறவில்லை. எனவே, அவரது கோரிக்கையை நிராகரிப்பது சரியானதாக இருக்காது.