புதுடெல்லி: நளினி, ரவிச்சந்திரன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட முகாந்திரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது. நன்னடத்தையை அடிப்படையாக கொண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசும், ஒன்றிய அரசும் பதிலளிக்க கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு நேற்று முன்தினம் தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த 2 பேரின் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தெரிவித்தது.