இந்தியர்கள் உயிரோட இருக்க மோடி தான் காரணம்: பட்நவிசின் மகா ஐஸ்

மும்பை: கொரோனா தடுப்பூசிகளின் மூலம் நம்மை காத்த பிரதமர் மோடிதான் மக்கள் அனைவரும் உயிருடன் இருக்க காரணம் என மகாராஷ்டிரா துணைமுதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியுள்ளார். ஒஸ்மானாபாத் தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் அர்ச்சனா பாட்டீல் மற்றும் மதா மதா தொகுதி பாஜ வேட்பாளர் ரஞ்சித் சிங் நிம்பல்கர் ஆகியோருக்கு ஆதரவாக பட்நவிஸ் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா தொற்று நோய்களின்போது மோடி எடுத்த முன்முயற்சி காரணமாக இந்தியாவில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு நமக்கு பயன்பட்டது மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் இந்தியா வலுவான நிலையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியா முன்னேறி வருகிறது. மற்ற அனைத்து பிரச்னைகளையும் மறந்து விட்டு மோடிக்கு வாக்களியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

The post இந்தியர்கள் உயிரோட இருக்க மோடி தான் காரணம்: பட்நவிசின் மகா ஐஸ் appeared first on Dinakaran.

Related Stories: