கவுட்ருக் கிராமத்தினர் மீது, இன்னொரு கிராமத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர். பதிலுக்கு கவுட்ருக் கிராம தன்னார்வலர்களும் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சண்டை நீடித்ததால் கிராமத்தில் இருந்த பெண்கள்,முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கிசூட்டில் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.
The post மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கிராம தன்னார்வலர்கள் இடையே துப்பாக்கி சண்டை appeared first on Dinakaran.