திரிணாமுல் கோஷ்டி மோதலில் ஒருவர் பலி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேற்குவங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. கடைசி கட்டமான ஜூன் 1ம் தேதி கொல்கத்தா தக்ஷின், கொல்கத்தா உத்தரா, டம் டம், பராசத், பாசிர்ஹாட், ஜெய்நகர், மதுராபூர், டையமன்ட் ஹார்பர் மற்றும் ஜாதவ்பூர் ஆகிய 9 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொல்கத்தாவின் பாகுயாட்டியில் உள்ள அர்ஜூன்பூர் மேற்கு பாராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு பிரிவினடையே பலத்த மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் செங்கற்கள், கிரிக்கெட் மட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் சஞ்சீவ் தாஸ் அக்கா போட்லா என்பவர் படுகாயமடைந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சஞ்சீவ் தாஸ் அக்கா போட்லா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக 13 பேரை கைது செய்துள்ள காவல்துறை அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் தெற்கு கொல்கத்தாவின் ஆனந்த்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தன்னை தாக்கியதாக பாஜ பெண் வேட்பாளர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

The post திரிணாமுல் கோஷ்டி மோதலில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: