புதுகை, துவரங்குறிச்சியில் 3 மலை பாம்பு உள்பட 6 பாம்புகள் பிடிபட்டன

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. நேற்று இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. தகவலறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் வந்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் இலுப்பூர் அருகே உள்ள கூவாட்டுப்பட்டியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் வீட்டின் அருகில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இலுப்பூர் தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிடிபட்ட 2 மலைப்பாம்புகளையும் வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் விட்டனர். விராலிமலை வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது வீட்டின் மேற்கூரையிலிருந்து 9 அடி கருஞ்சாரை பாம்பு உள்பட , மேலும் 2 வீடுகள் அருகே 2 விஷபாம்புகள் பிடிபட்டு காப்புகாட்டில் விடப்பட்டது.

மேலும் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த காரைப்பட்டி பகுதியில் ஐயர் தோட்டத்தில் இன்று காலை தோட்டத்தில் வேலைக்காக சென்றவர்கள் அங்கு மலைப்பாம்பு ஒன்று இருப்பதை பார்த்தனர்.இதுபற்றி தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி வனத்துறையினர் 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்து மலைப்பகுதியில் விட்டனர்.

Related Stories: