நிதிஷ் குமாருக்கு வயதாகி விட்டது எதையோ நினைத்து எதையோ பேசுகிறார்: பிரசாந்த் கிஷோர் கிண்டல்

பாட்னா:  `பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வயதாகி விட்டதால் ஏதோ சொல்ல நினைத்து எதையோ பேசுகிறார்,’ என்று தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நிதிஷ் குமாரின் ஆலோசகராக, ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர் 3,500 கி.மீ. தூர ஜன் சுராஜ் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ‘பிரசாந்த் கிஷோர் பாஜ.வுக்காக செயல்பட்டு வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை காங்கிரசுடன் இணைக்க சொன்னார்,’ என்று நிதிஷ் குமார் நேற்று முன்தினம் கூறினார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், `நிதிஷ் குமாருக்கு வயதாகி விட்டது. அவர் அரசியல் ரீதியாக தனித்து விடப்பட்டுள்ளார். தன்னை சுற்றி உள்ளவர்களை கூட நம்புவது கிடையாது. இந்த பதற்றத்தினால், எதையோ சொல்ல நினைத்து, எதையோ பேசி வருகிறார்,’ என கூறியுள்ளார்.

Related Stories: