மதுரை: மதுரை மத்திய சிறைக்காவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து அதிகாரிகள் குழு விசாரிக்க டிஐஜி உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் 2006ல் சிறைக்காவலராக பணியில் சேர்ந்தார். அதிகாரிகள், சிறை நிர்வாகம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியதால், இருமுறை துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளானார். பின் மீண்டும் பணியில் சேர்ந்தார். கொடைக்கானல் கிளைச்சிறையில் சரிவர பணிக்கு வராமல் இருந்ததாக புகார் எழுந்தது. எனவே, கடந்த 2 நாட்களுக்கு முன் மதுரை சிறைக்கு இடம் மாற்றப்பட்டார்.