குழந்தை திருமணம் மேலும் 2 தீட்சிதர்கள் சிதம்பரத்தில் கைது

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு சன்னதியை சேர்ந்தவர் தில்லை நாகரத்தினம் (60). இவரது மகன் பத்ரிசன் (20). இவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 2021 ஜனவரி 25ம் தேதி கீழ வீதியில் பத்ரிசனுக்கும், 13 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இது பற்றி கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து மணமகனின் அண்ணன் சூர்யா, தாய் தங்கம்மாள் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், மணமகன் பத்ரீசன், அவரது தந்தை தில்லை நாகரத்தினம் ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். சிறுமியின் தாய், தந்தை ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: