செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வேதப்பர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (43). இவரது மனைவி சுப்புலட்சுமி (41). இவர் கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, தனியார் பள்ளி அருகே இவரது கம்மல் கீழே விழுந்துள்ளது. அதை எடுப்பதற்காக, சுப்புலட்சுமி டூவீலரை நிறுத்திவிட்டு, கம்மலை எடுத்தார். அப்போது, தலைக்கவசம் அனிந்தவாறு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சுப்புலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடினர்.