புதுடெல்லி: ‘உலகில் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது,’0 என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். குஜராத் மாநிலம், கேவடியாவில் ‘தொழில்துறை 4.0’ மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடியின் உரையை ஒன்றிய கனரக தொழில்துறை இணை செயலாளர் வாசித்தார். அதில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது: இதற்கு முன் ஏற்பட்ட தொழிற்புரட்சிகளை இந்தியாவால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால், உலகின் 4வது தொழிற்புரட்சியை வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது.