புதுடெல்லி: ‘முர்முவை போல் ஜால்ரா தட்டும் ஜனாதிபதி, எந்த நாட்டுக்கும் கிடைக்கக் கூடாது,’ என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி விமர்சித்தது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. குஜராத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 80 சதவீதம் குஜராத்தில் செய்யப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த உப்பை சாப்பிடுகின்றனர்,’ என்றார். இதை கண்டித்து காங்கிரஸ் முன்னாள் எம்பி உதித் ராஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஜனாதிபதியின் பேச்சு, பாஜ.வை தாஜா செய்வது போல் உள்ளது. எந்த நாட்டுக்கும் முர்மு போன்ற ஜனாதிபதி கிடைக்கக் கூடாது,’ என்று கூறியுள்ளார். இது, பெரும் சர்ச்சையாகி உள்ளது.