புதுடெல்லி: நிதி மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 115 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இதில் ரூ.1.8 கோடி பணம் மற்றும் 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. இணைய வழியில் நிதி மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எப்பிஐ கொடுத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் நிதி மோசடி குற்றங்களில் தொடர்புடைய 87 இடங்களில் சிபிஐயும் 28 இடங்களில் மாநில போலீசாரும் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.