பக்வாரா: லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கக்கோரி விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர். உத்தரப் பிரதேசம் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, உபி மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, ஒரு கார் போராட்ட கூட்டத்தில் புகுந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.