பாட்னா: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் இன்று தனது பாதயாத்திரையை துவக்குகிறார். பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராக இருந்து, பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின், தேர்தல் வியூக நிபுணராக தொடர்ந்து செயல்பட்டு வந்த அவர் சமீபத்தில் அப்பணியிலிருந்து விலகி, மக்களை சந்திக்க உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் பாதயாத்திரை செல்ல உள்ளார்.