தெருநாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும்: கேரள அரசு மனு

திருவனந்தபுரம்: தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் வாகனங்களிலும் செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் உள்பட அனைவரும் நாய்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர். இந்த வருடம் 9 மாதத்தில் மட்டும் நாய்களின் தாக்குதலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து வெறி பிடித்த தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கேரளாவில் பல பஞ்சாயத்துகள் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் கேரள அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

Related Stories: