லாகூர்: மதவெறியர்களை தூண்டிவிட்டு என்னை கொல்ல சதித் திட்டம் நடப்பதாகவும், நவாஸ் மகள் இதனை செய்வதாக இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அவரது அமைச்சரவை அதிகாரிகளுக்கு இடையேயான நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆடியோ பேச்சு லீக் ஆனதால், பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஹீம் யார்கானில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், ‘அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையிலான பேச்சு தொடர்பான ஆடியோ வெளியானதையடுத்து, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும்.