புதுடெல்லி: புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார். கர்நாடக மாநிலம், மைசூருவில் தசரா விழா இன்று தொடங்கி வரும் 3ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடங்கி வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், ஜனாதிபதியின் நிகழ்ச்சிகள் குறித்த அறிக்கையை ராஷ்டிரபதி பவன் நேற்று வெளியிட்டது.
அதன்படி, இன்று மைசூருக்கு வரும் ஜனாதிபதி, சாமுண்டி மலையில் தசரா விழாவை தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து, ஹூப்பள்ளி செல்லும் அவர், `போரா சன்மானா’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.