காரைக்குடி: காரைக்குடியில் இன்று காலை செருப்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான செருப்புகள் எரிந்து நாசமடைந்தன. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு அக்ரஹாரம் பகுதியில் டில்லா முகமது என்பவருக்கு சொந்தமான செருப்பு கடை குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து இன்று காலை 8 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைத்தொடர்ந்து குடோனில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள், காரைக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.