சென்னை அண்ணா அறிவாலயத்தில் 2வது நாளாக 21 மாவட்ட செயலாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்: திமுகவினர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிக்கு நாளை மனு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று 21 மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. திமுக முன்னணியினர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான வேட்புமனு தாக்கல் நாளை நடக்கிறது. திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

2வது நாளான நேற்று நீலகிரி, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, நாமக்கல் கிழக்கு. நாமக்கல் மேற்கு மாவட்டடங்கள். சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, கரூர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு அமைச்சர்கள், தற்போதைய மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என போட்டி போட்டு கொண்டு விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

இன்று(சனிக்கிழமை) புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு (மயிலாடுதுறை), நாகை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய மாவட்டங்களுக்கான வேட்புமனுதாக்கல் நடைபெறுகிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை), வேலூர் மத்திய, வேலூர் மேற்கு(திருப்பத்தூர்), திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

Related Stories: