ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் 9 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்த சித்தப்பா கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 9 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்த சித்தப்பா கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையில் சில தினங்ளுக்கு முன்பு ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி ஒருவர் பீர் குடிக்க வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து நெய்யாற்றின்கரை குழந்தைகள் நல அமைப்பிற்கு புகார் வந்தது. இதன்படி குழந்தைகள் நல அமைப்பினர் விசாரணையை தொடங்கினர். நெய்யாற்றின்கரை அருகே உள்ள வழுதூர் பகுதியைச் சேர்ந்த மனு என்பவர் தான் சிறுவனை கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்தார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினர் நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் சிறுவன், மனுவின் அண்ணன் மகன் என்பதும் சிறுவனுக்கு 9 வயது ஆகிறது. ஓணம் பண்டிகை அன்று அண்ணன் மகனை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் பொது இடத்தில் வைத்து கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்துள்ளார். பின்னர் அதை நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதையடுத்து மனுவை கைது செய்து நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: