திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 9 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்த சித்தப்பா கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையில் சில தினங்ளுக்கு முன்பு ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி ஒருவர் பீர் குடிக்க வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து நெய்யாற்றின்கரை குழந்தைகள் நல அமைப்பிற்கு புகார் வந்தது. இதன்படி குழந்தைகள் நல அமைப்பினர் விசாரணையை தொடங்கினர். நெய்யாற்றின்கரை அருகே உள்ள வழுதூர் பகுதியைச் சேர்ந்த மனு என்பவர் தான் சிறுவனை கட்டாயப்படுத்தி பீர் குடிக்க வைத்தார் என்பது தெரியவந்தது.