திருத்தணி: திருவாலங்காடு பகுதியில் தொடர்ந்து கஞ்சாவிற்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் திருவலங்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை கண்காணித்தனர். அப்போது குப்பம் கண்டிகை கிராமத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ 25கிராம் கஞ்சா இருந்தது. மேலும் அவரிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் இருந்தது.