திருவாலங்காடில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருத்தணி:  திருவாலங்காடு பகுதியில் தொடர்ந்து கஞ்சாவிற்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் திருவலங்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை கண்காணித்தனர். அப்போது குப்பம் கண்டிகை கிராமத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ 25கிராம் கஞ்சா இருந்தது. மேலும் அவரிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் இருந்தது.

விசாரணையில், திருவலங்காடு குப்பம் கண்டிகை பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரது மகன் சுரேஷ் (35) என்பது தெரியவந்தது. போலீசார் சுரேஷை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சுரேஷ் மீது திருவள்ளூர், திருமுல்லைவாயில், புல்ரம்பாக்கம் மற்றும் ஆவடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் இருப்பது தெரியவந்தது.

Related Stories: