மதுராந்தகம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சென்னை மாநகரில் இருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மதுராந்தகம் நகராட்சி. பாண்டிச்சேரி, மரக்காணம், சூனாம்பேடு, மதுராந்தகம் வழியாக சென்னை செல்லும் பேருந்து, கார், பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும், செய்யூர், சித்தாமூர், மதுராந்தகம் சென்னைக்கும், கூவத்தூர் பவுஞ்சூர் வழியாக மதுராந்தகம் வந்து சென்னை செல்லும் வாகனங்களும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் ஒருசில அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் மதுராந்தகம் நகருக்கும் மதுராந்தகம் புறவழிச் சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றன.