திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு, அசாம் மாநிலத்திலிருந்து கடந்த 2011ல் பெண் யானை கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜெயமால்யதா என பெயரிட்டு, கோயில் யானை மண்டபத்தில் வளர்த்து வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இந்த யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து, 2 பாகன்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது புதிய பாகன்கள் யானையை பராமரித்து வருகின்றனர். இந்த யானை தாக்கப்படுவதாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாவதால், தமிழக அரசு சார்பில் சிறப்புக்குழு அமைத்து ஆய்வு செய்தனர்.