திருவாடானை: திருவாடானை அருகே காடாங்குடி பேருந்து நிறுத்தத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையை சுற்று வட்டார கிராமங்களான காடாங்குடி, உசிலனகோட்டை, தண்டலக்குடி முகிழ்தகம், செக்காந்திடல் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.