சாங்லி: உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த 4 சாதுக்கள், மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டம் லவாங்கா வழியாக பந்தர்பூருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். அவர்கள் சாங்லி மாவட்டம் வழியாக காரில் சென்ற போது, அவ்வழியாக சென்ற இளைஞனிடம் பந்தர்பூருக்கு செல்ல வழி கேட்டனர். அந்த இளைஞன், அவர்களை குழந்தைகளை கடத்தி செல்லும் கும்பல் என கருதி, அப்பகுதி மக்களை திரட்டினார். சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் 4 சாதுக்களையும் பிடித்து விசாரித்தனர்.