குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து 4 உ.பி சாதுக்களுக்கு தர்மஅடி

சாங்லி: உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த 4 சாதுக்கள், மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டம் லவாங்கா வழியாக பந்தர்பூருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். அவர்கள் சாங்லி மாவட்டம் வழியாக காரில் சென்ற போது, அவ்வழியாக சென்ற இளைஞனிடம் பந்தர்பூருக்கு செல்ல வழி கேட்டனர். அந்த இளைஞன், அவர்களை குழந்தைகளை கடத்தி செல்லும் கும்பல் என கருதி, அப்பகுதி மக்களை திரட்டினார். சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் 4 சாதுக்களையும் பிடித்து விசாரித்தனர்.

அவர்களின் பதிலில் திருப்தி அடையாத அப்பகுதி மக்கள் அடித்து உதைத்தனர். தகவலறிந்த போலீசார் வந்து, சாதுக்கள் 4 பேரையும் மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்கள் பஞ்சதஷ்னம் ஜூனா அகராவைச் சேர்ந்த சாதுக்கள் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். சாதுக்கள் மீதான தாக்குதல் வீடியோ வைரலாகி உள்ளதால், வடமாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: