சண்டிகர்: அரியானாவில் ராகிங் கொடுமையால் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் சன்ஸ்கர் சதுர்வேதி (19), வணிக நிர்வாகவியல் படிப்பு படித்து வந்தார். குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த அவர், அவரது விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் சன்ஸ்கர் சதுர்வேதி மர்மான முறையில் விடுதியில் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார், மாணவரின் சடலத்தை விசாரணை நடத்திவருகின்றனர்.