பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் சுமார் 50 ஆண்டு பழமை வாய்ந்த கிராம தேவதை ஆலயத்தம்மன் கோயில் புனரமைக்கும் பணி முடிவடைந்து கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடந்தது. பந்தகால் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் விழா தொடங்கியது. காலையில் கணபதி பூஜை, சங்கல்பம், மகாபூர்ணாஸ்ஹுதி உள்ளிட்டவை நடந்தது. 2ம் கால, 3ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. இன்று காலை 7.30 மணியளவில் புரோகிதர்கள் யாக சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை கோயில் சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வந்து அம்மன், மூலவருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.