திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான இயக்கம் என்ற பெயரில் தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ச.கண்ணன் இந்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வு பாடலை எழுதி அதனை பாடவும் செய்து தூய்மைப் பணியாளர்களின் நடனத்தோடு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.