திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயா நகர் விரிவாக்கம் குமரவேல் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சர்வ சாய்பாபா ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக 8ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கிராம தேவதை வழிபாடு நடைபெற உள்ளது. தொடர்ந்து பூர்ணா ஹூதியும், தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் சாய்பாபா விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மேலும் அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, மிருத்சங்கரஹனம், அங்குரார்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாகபூஜை, சுவாமிக்கு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்படும்.