ஆடும் லெவனில் இந்தியா குழப்பம்: ஷோயப் அக்தர் சொல்கிறார்

கராச்சி: பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கூறியதாவது: லீக் போட்டியில் பாகிஸ்தான் அன்று தோற்றபோதே நான் இந்தியர்களிடமும் என் நண்பர்களிடமும் கூறினேன்....``ஓவரா கொண்டாடாதீர்கள் பாகிஸ்தான் நிச்சயம் திரும்பி வந்து பயங்கரமா ஆடும்னும் இந்தியாவைக் கருணையின்றி அடித்து நொறுக்கும் என்றும் கடந்த வீடியோவிலேயே நான் கூறினேன். அதுபோல் நடந்துவிட்டது.

ஆனால் இந்திய அணி தேர்வுக்குழுவிடம் கேட்கிறேன், உங்களது லெவன் என்ன? இறுதி 11 வீரர்கள் என்று தீர்மானிப்பதில் ஏன் இத்தனை குழப்பம்? உங்கள் எதிர்கால வீரர் யார் ரிஷப் பன்ட்டா, தினேஷ் கார்த்திக்கா? தீபக் ஹூடாவா, ரவி பிஷ்னோயா?... முதலில் உங்கள் இறுதி லெவனைக் கண்டுப்பிடித்துக் கொள்ளுங்கள். இந்திய அணி மிகுந்த குழப்பமான தேர்வைச் செய்கிறது. ஏன் இத்தனைக் குழப்பம் என்றுதான் எனக்குப் புரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: