சொந்தக் களத்தில் ஆடுவது மற்றும் நடப்புத் தொடரில் ஏற்கனவே மும்பையை வீழ்த்தியுள்ளது கொல்கத்தா அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். அதே சமயம், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி 12 ஆட்டங்களில் 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் மட்டுமே பெற்று பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய 2 ஆட்டங்களில் இன்று வலுவான கொல்கத்தா, அடுத்து லக்னோவை சந்திக்கிறது. மும்பை அணி ஆறுதல் வெற்றிக்காகவும், கொல்தத்தா முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. குறிப்பாக, சூரியகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
The post முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல் appeared first on Dinakaran.