இத்தாலி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜெங், மேடிசன்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடக்கிறது. முதலில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்(29வயது, 16வது ரேங்க்), ருமேனியாவின் சொரனா சிர்ஸியா(34வயது, 32வது ரேங்க்) இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். அதில் மேடிசன் 6-2, 6-1 என நேர் செட்களில் சிர்ஸ்டியாவை எளிதில் வீழ்த்தினார். ஒரு மணி நேரத்தில் வென்ற மேடிசன் முதல் வீராங்கனையாக காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனை ஜப்பானின் நவோமி ஒசாகா(28வயது, 173வது ரேங்க்), சீன வீராங்கனை கின்வென் ஜெங் (21வயது, 7வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் ஜெங் ஒரு மணி 24 நிமடங்களில் 6-2, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மகப்பேறு காரணமாக 2023ம் ஆண்டு முழுவதும் களம் காணமல் இருந்த ஒசாகா, இந்த ஆண்டு ஜனவரியில்தான் மீண்டும் களம் திரும்பினார். அதன் பிறகு இந்த ஆண்டு ஒரே ஒருமுறை(கத்தார்) மட்டுமே அதிகபட்சமாக காலிறுதி வரை முன்னேறி உள்ளார்.

* போபண்ணா இணை முன்னேற்றம்
இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸி வீரர் மேத்யூ எப்டன் இணை இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அவர்கள் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலியின் மேட்டீயோ அர்னால்டு/பிரான்சிஸ்கோ பாஸ்சரோ இணையை 52நிமிடங்களில் 2-0 என நேர் செட்களில் வென்றனர்.

The post இத்தாலி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜெங், மேடிசன் appeared first on Dinakaran.

Related Stories: