ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பஸ் நிலையத்தில் ரூ.20 லட்சத்தில் கழிவறை கட்டிடம் கட்டவும் மற்றும் தினகரன் செய்தி எதிரொலியால் பேரூராட்சி முழுவதும் கொசு மருந்து தெளிக்கவும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் குமரவேல், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் ரூ.20 லட்சத்தில் பொதுக்கழிப்பிடம் கட்டுதல், பேரூராட்சி முழுவதும் புகைபோக்கி மூலம் கொசு மருந்து தெளித்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கடந்த 26ம் தேதி நமது தினகரன் நாளிதழில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி 7வது வார்டு நேரு பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் அதிக அளவு கொசுக்கள் உற்பத்தியாவதாக செய்தி வெளியானது. இதையடுத்து அந்த பகுதியில் கொசு மருந்து தௌிப்பது என தீர்மான நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.