குடித்துவிட்டு தகராறு செய்ததால் தந்தையின் கழுத்தை அறுத்த மகன்; கத்தியுடன் போலீசில் சரண்

அண்ணாநகர்: அமைந்தகரை பாரதிபுரம் ஷெனாய் நகரை சேர்ந்தவர் சாகுல்அமீது (57). அதே பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர், தினமும் குடிபோதையில் தனது மனைவி, மகன், மருமகளிடம் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை 4.30 மணிக்கு வழக்கம்போல் சாகுல்அமீது குடிபோதையில்  வீட்டிற்கு வந்த தனது மனைவி, மகனிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகன் சதாம் உசேன் தந்தையை சரமாரியாக தாக்கியதுடன், வீட்டில் இருந்த காய்கறி கத்தியை எடுத்து வந்து தந்தையின் கழுத்தை அறுத்துள்ளார். அதை பார்த்த அவரது தாயார் மகனை தடுக்க முயன்றுள்ளார். ஆனால், தாக்கி கீழே தள்ளிய சதாம் உசேன், தந்தை கழுத்தை தொடர்ந்து அறுத்துள்ளார். உடனே, சதாம் உசேனின் தாய் வெளேயே ஓடி வந்து எனது கணவரை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார்.

இதனால் சதாம் உசேன் அங்கிருந்து தப்பிவிட்டார். ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடைத்த சாகுல் அமீதை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், சதாம் உசேனை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சதாம் உசேன் கத்தியுடன் அமைந்தகரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் போலீசார் சதாம் உசேனை கைது செய்து அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். 

Related Stories: