டெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் 200 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக கவர்ச்சி நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி போலீசார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது, சிறையில் இருந்தபடியே தொழிலதிபரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் பறித்தது உட்பட ஏராளமான வழக்குகளில் சுகேஷ் சந்திரசேகர் சிக்கியிருக்கிறார். இவருடன் தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின், நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன் ஒருகட்டமாக நோரா பதேஹியிடம் டெல்லி போலீசார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.