புதுடெல்லி: தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம்சாட்டியது. மேலும் நிதி மற்றும் வணிகத் திட்டங்கள் குறித்த தகவல்களை இமயமலையில் உள்ள ஒரு யோகியுடன் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.