பெரியபாளையம்: ஆரணி பேரூராட்சியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடம் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல், இருந்து வரும் பிரச்னைகள் குறித்து உடனடியாக பட்டியல் அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இதனையடுத்து, பொன்னேரி தொகுதியில் உள்ள ஆரணி பேரூராட்சியில், தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து எம்எல்ஏ துரை.சந்திரசேகர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது, நீண்ட காலமாக பேருந்துகள் சாலையிலும், பஜாரிலும் நின்று இயக்கப்படுவதால் விபத்துகள், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும்.