திருப்பத்தூர்: ஆம்பூரில் பரிதா குழுமத்தின் தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளில் 4வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல் மற்றும் காலணி தொழிற்சாலை என 10 இடங்களில் கடந்த 23ம் தேதி காலை 8 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையில் 110 அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து 4வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் இந்த தொழிற்சாலைகளில் கடந்த 10 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறித்த ஆவணங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.