புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடபட்டது. வீடுகள் தோறும் கிருஷ்ணரை வரவேற்கும் வகையில் மாவிலை தோரணங்கள் கட்டியும் கிருஷ்ணர் பாதத்தை வரைந்தும் பலகாரங்களுடன் வழிபாடு நடத்தினர். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில், அமேசான் விற்பனை தளத்தில் கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு ராதை, கிருஷ்ணன் இருக்கும் ஒவியம் விற்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஓவியம், ராதா - கிருஷ்ணரை ஆபாசமாக சித்தரித்து வரையப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.