லக்னோ: லக்னோவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று அதிகாலை 1.12 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர். நகரம் முழுவதும் ஒரே நிலநடுக்க பீதியாக இருந்தது. வீட்டிற்குள் இருந்த பொருட்களும் ஆங்காங்கே கீழே விழுந்ததால், என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் இதுவரை உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.