புதுடெல்லி: ராஜஸ்தானில் எஸ்பிஐ கிளையில் இருந்த ரூ.11 கோடி நாணயங்கள் திருடு போனது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 25 இடங்களில் சோதனை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம், கரோலியில் ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளை உள்ளது. இந்த வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் குறித்து கடந்தாண்டு ஆய்வு நடத்தப்பட்டதில் பல குளறுபடிகள் நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, தனியார் நிறுவனம் மூலமாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வங்கியின் கையிருப்பு பணம் எண்ணப்பட்டது. அதில், ரூ.2 கோடி மதிப்புள்ள நாணயங்கள் மட்டுமே இருந்தன.