பீகார்: டெல்லியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ், நேற்று பீகார் திரும்பினார். அவரை பீகார் முதல்வர் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், உடல் நிலை பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி, பிரதான கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் இடம் பெற்றுள்ளது.