புதுச்சேரி: கல்வி மற்றும் கலாச்சாரப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள துருக்கி மாணவர்களுக்கு சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலா வரும் மாணவர்கள், அம்மாநிலத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்கின்றனர். அந்த வகையில் துருக்கி நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ள 15க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள், பாரம்பரிய கலையான சுடு களிமண் பொம்மை செய்யும் பயிற்சியில் ஈடுபட்டனர்.